ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

சென்னை கதைகள்

சென்ற வாரம் நூலகத்தில், சென்னை சிறுகதைகள் என்ற புத்தகத்தைப் பார்த்தேன். முதல்முறையாக சென்னையைப் பற்றிய ஒரு சிறுகதை தொகுப்பை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. பல முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்று இருந்தன. சென்னையின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை, மொழி, உணவு, வெயில் என எல்லா தளங்களையும் தொட்டு இருந்தது. எல்லா சிறுகதைகளும் சிறப்பாகவே இருந்தது. 

என்னை மிகவும் பாதித்தது, ஜெயகாந்தன் எழுதிய "தாம்பத்தியம்" என்ற சிறுகதை. நடைப்பாதையில் குடியிருக்கும், காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளிக்கும், சித்தாள் வேலைச் செய்யும் பெண்ணுக்கும் திருமனம் நடைபெறுகிறது. இவர்களுக்குள் நடைபெறும் தாம்பத்தியம், இந்த சமுதாயத்தால் எப்படி கேவலப்படுத்தப்படுகிறது என்பதுதான் கதை. எனக்கும் சென்னைக்கும் ஒரு 12 வருடப் பரிச்சயம் இருக்கும். ஒவ்வொருமுறை நடைபதையில் வாழ்பவர்களை பார்க்கும் போதும் எனக்குள் இந்த கேள்வி எழும். இவர்களுக்குள் எப்படி தாம்பத்தியம் நிகழ்ந்து, குழந்தைப் பெற்றார்கள் என்று. சென்னையின் பரபரப்பில், நாம் பல விடயங்களை கவனிப்பது இல்லை. நடைப்பாதையில் வாழும் பெரியவர்களைவிட, சிறார்களும் குழந்தைகளும்தான் என் கவலையை அதிகம் ஆக்குபவர்கள்.





 இன்று(ஏப்ரல் - 12) "வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்" சில தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் இனைந்து, "வீதியிலிருந்து பள்ளிக்கு" என்ற நிகழ்வின் மூலம் பல ஆயிரம் குழந்தைகளை, படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

https://www.youtube.com/watch?v=BCd3fmXQQy4 



இந்தியாவில் மட்டும் 11 மில்லியன் சிறார்கள் வீதியோரத்தில் இருக்கிறார்கள். ஒரு தனியார் நிறுவனம் இந்த அளவிக்கு செய்யும் போது, அரசாங்கம் நினைத்தால் இன்னும் அதிகம் செய்யலாம். நம் அருகிலும் இதுபோன்ற நிறைய சிறுவர்கள் உள்ளார்கள். அதில் ஒருவருடைய வாழ்கையை ஆவது மாற்ற முயற்சி செய்துதான் பார்போமே.....