வெள்ளி, 25 நவம்பர், 2016

பால்யக்கால நினைவுகள் 3 - ஈர்ப்பு



crush என்ற ஆங்கிலச்சொல்லிற்கு, தமிழில் ஈர்ப்பு என்றுக் கூறலாம். ஏறக்குறைய எல்லோருமே தம் சிறு வயதில் இப்படியான ஒரு ஈர்ப்பை கடந்துவந்திருப்பார்கள். பெரும்பாலும் ஆண்களுக்கு, தன்னைவிட பெரியப் பெண் மீதுதான் ஈர்ப்பு இருக்கும். அதன் பின் உள்ள மனோதத்துவத்தை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், பிராய்டைதான் துணைக்கு அழைக்க வேண்டும். இந்த இடுக்கையில் அது வேண்டாமென்று நினைக்கிறேன்.

சிலருக்கு ஆசிரியை மீதும், சிலருக்கு தன் தெருவில் ஊரில் இருக்கும் அக்காகளின் மீதும், ஈர்ப்பு இருக்கும். இது பொதுவானது. 80 களில் சிறுவர்களுக்கு நடிகையின் மீது ஈர்ப்பு இருப்பது அரிதான விடயம். தொலைக்காட்சி இந்த அளவு வளர்ச்சியடையாத காலம். திரைப்படம் கூட எப்பொழுதாவதுதான் பார்க்கமுடியும். இந்த சூழ்நிலையில் நடிகை மீது ஈர்ப்பு எற்படுவது அரிது.

அந்த அரிய வகை விலங்கில் நானும் ஒருவன். என்னுடைய ஈர்ப்பு நடிகை காஞ்சனா. அப்பொழுது எனக்கு, 6 அல்லது 7 வயது இருக்கும். தூர்தர்ஸனில் ‘சாந்தி நிலையம்’ படம் போட்டிருந்தார்கள். (அப்பொழுதெல்லாம் ஞாயிற்றுகிழமை மட்டும்தான் சினிமா பார்க்க முடியும் அதனால் எந்த படமாக இருந்தாலும் பார்த்துவிடுவேன்) முதல் முறையாக காஞ்சனா அவர்களை பார்த்த நாள். ஆனால் அதன் பிறகு, பல வருடங்கள் கழித்துதான், காதலிக்க நேரமில்லை சினிமாவை பார்த்தேன்.(காஞ்சனாவின் முதல் படம்).

அடுத்தப் படத்தைப் பார்க்கும் பொழுது நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இப்படி நான் காஞ்சனாவின் பெரும்பான்மையான படங்களை, 25 வயதிற்கு மேல்தான் பார்த்தேன். இன்றுவரை கஞ்சனாமீதிருந்த ஈர்ப்பு சிறுதுக்கூட குறையவில்லை. இப்பொழுது தொலைகாட்சியில் காஞ்சனா நடித்த படங்களையோ, பாடல்களையோ ஒளிபரப்பினாலும் காஞ்சனாவை வைத்தக் கண் வாங்காமல், பார்த்துக்கொண்டிருப்பேன்.

திங்கள், 24 அக்டோபர், 2016

பால்யக் கால் நினைவுகள் - 2

 நன்பர்கள்

                             


என் பால்யக் காலத்தில் எனக்கு முதலில் கிடைத்தது, தோழிதான். என் சித்தியின் மகள்(அம்மாவின் தங்கை). நாங்கள் அம்மு என்று அழைப்போம். எனக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருவர் அவர்கள் பிறப்பதற்கு 3 வருடங்க்ளுக்கு முன்பே பிறந்துவிட்டதால், என் முதல் சகோதரியும், முதல் தோழியாகவும், அம்முவே ஆகிவிட்டார்.

                              என் அப்பாவின்  வேலை நிமித்தம் நான் என் ஆயா (அம்மாவின் அம்மா) வீட்டில் வளர்ந்தேன். என் சித்தியின் வீடும் பக்கத்துத் தெருவிலே இருந்ததால் நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம். ஒரே பள்ளி, என்னைவிட சிறியவள் என்பதால் வகுப்பு மட்டும் வேறு.

  எங்கள் வீட்டில் ஆண், பெண் பாகுபாடு காட்டாமல், வளர்த்தார்கள். பெண் குழந்தைகளுக்குதான் எங்கள் வீட்டில் எப்பொழுதும் முன்னுரிமை. அதனால் தான் நான் பெண் மீது ஆதிக்கம் செலுத்தாமல், அவர்களை சக மனிதியாக பார்க்க கற்றுக்கொண்டேன்.

                       
 இன்று நிறைய ஆண்கள் பெண்ணை அடக்கி ஆள நினைக்கும், ஆணாதிக்க மனோபாவம் அவன் குடும்பத்தில்தான் விதைக்கப்படுகிறது. அதை இந்த சமுகம், ஊடகம், சினிமா வளர்த்தெடுக்கிறது.

                           மற்றபடி, பள்ளியில் 2 தோழிகள். நான்காம் வகுப்புவரை இதுதான் என் நட்பு வட்டம். பிறகு, என் அப்பாவிற்கு என் சொந்த ஊரான ஆரணிக்கே மாற்றல் ஆனதால், நானும், ஆரணி வந்துவிட்டேன்.


                        6 வகுப்பு படிக்கும் போதுதான், என் பள்ளிக்கால நன்பர்கள் அறிமுகமானார்கள். இளையராஜா, மோகன், ராஜ ராஜன் என் நெருங்கிய நன்பர்கள். 7 ஆம் வகுப்பில் வினோத் எங்களுடன் சேர்ந்தான். 8 ல் யுவராஜ்.

                   10 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். 11,12 ஆம் வகுப்புகளை நான் வேறுப் பள்ளியில் படித்தேன். அங்கு வேறு புதிய நன்பர்கள். ஆனந்த், பூபதி, செந்தில், புவனேஸ்வர், கோடீஸ்வரன், ராஜேஸ் என் பெரிய நன்பர்கள் வட்டமே இருந்தது. இன்று எவறுமே தொடர்பில் இல்லை. வினோத், யுவராஜ் மட்டும் இன்றுவரை தொடர்பில் இருக்கிறார்கள்.

பால்யக் கால நினைவுகள் - 1



 நான் படிக்கும் புத்தகம், நான் பார்க்கும் திரைப்படம், நன்பர்களுடனான உரையாடல் என, என் பாலியக் காலத்தை எப்பொழுதும் நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கும். நினைத்து மகிழவும், பேசிக் களிக்கவும் நிறைய நினைவுகளைக் கொண்டது என் பால்யக்காலம்.

இன்றையத் தலைமுறையில் பெரும்பான்மையானவர்களுக்கு, தன் முதிர்வயதிலோ, நடுத்தர வயதிலோ, எண்ணிப் பார்க்க அப்படி ஒன்றும் சுவாரசியமான நினைவுகள் இருக்காது என்றே நினைக்கிறேன். அவர்கள் உலகை கைப்பேசியும், தொலைக்காட்சியும் அடைத்துக் கொண்டிருக்கின்றது.

பத்து வருடங்களுக்கு முன்புவரைக் கூட, என் பால்யக்கால நிகழ்வுகள் நினைவில் இருந்தன். இப்பொழுது நிறைய மறந்துவிட்டது. சில மங்களாகத்தான் நினைவிருக்கிறது. வயது ஏற, ஏற பழைய நினைவுகள் மறந்துக் கொண்டே வருகின்றன.

ஊர் காசு



முதல் முதலில் என் சொந்த செலவிற்கு பணம் தரப்பட்டது, இன்றும் என் நினைவில் இருக்கின்றன. அதற்கு முன்பும் நிறைய முறை பணம் தரப்பட்டுள்ளது. “ஊர் காசு” என்றுக் கூறுவார்கள். விடுமுறையில் உறவினை வீடுகளுக்குச் செல்லும் போதும், அவைகள் நம் வீடுகளுக்கு வரும்பொழுதும், அந்த வீட்டு சிறார்களுக்கு பணம் தறுவார்கள், அதற்குதான் ஊர்காசு என்றுப் பெயர். அவைப் எப்பொழுதும் என் அப்பாவிடம்தான் போய் சேரும். அதனை செல்வு செய்யும் உரிமை எனக்கில்லை.

அப்பொழுது எனக்கு 7 வயது என்று நினைக்கிறேன். என் அம்மாவின் சித்தப்பா, எங்கள் ’சின்னத் தாத்தா’ 5 பைசா, 10 பைசாவாக சில சில்லரை நானயங்களை எனக்குத் தந்தார். அதுதான் எனக்காக, என் சொந்த செலவிற்காக கொடுக்கப்பட்ட முதல் பணம். அதை வைத்து என்ன வாங்கினேன் என்று நினைவில்லை. ஒரு வேளை தேன் மிட்டாய் ஆக இருக்கலாம். அப்பொழுது அதுதான் என் பிரியமான நொருவை.

என் சின்னத் தாத்தாவிடம் 1,2,3, பைசாக்களும் சில இருந்தன ஆனால் அரசாங்கம் அப்பொழுது அவைகள் செல்லாது என அறிவித்திருந்தன.

திங்கள், 13 ஜூன், 2016

39 வது புத்தகக் காட்சி 2016


வழக்கத்துக்கு மாறாக இந்தமுறை புத்தகக் கண்காட்சி தீவுத்திடலில் நடைப்பெற்றது. சென்னையில் இருந்தவரை எங்கு நடந்தாலும், சென்று வருவது எனக்கு கடினமாக இருக்காது. சென்னை எனக்கு சொந்த ஊரைப்போன்றது, சொல்லப்போனால் சொந்த ஊரைக் காட்டிலும் சென்னையைப்பற்றி அதிகமாகவே தெரியும். சொந்த ஊருக்கு வந்து 2 வருடங்கள் ஆகின்றது இன்றுவரை நான் ஏன் சென்னையைவிட்டு வந்தேன் என்றே தெரியவில்லை.

இந்தமுறை என் சொந்த ஊரான ஆரணியிலிருந்து (திருவண்ணாமலை மாவட்டம்) தீவுத்திடலை வந்தடைவதற்குள்ளாகவே மிகுந்த கலைப்படைந்துவிடேன். வெயில் என்னை மேலும் கலைப்படையச் செய்தது. மொத்தம் இரண்டரை மணி நேரம் அரங்குகளைப் பார்த்தேன். மேலோட்டமாகத்தான் என்னால் பார்க்க முடிந்தது. சின் புத்தகங்களை வங்கினேன். பெரிய பதிப்பகங்களை இந்த முறை தவிர்த்துவிட்டு, சிறிய பதிபகங்களில் புத்தகங்களை வாங்கினேன். பெரிய பதிப்பகங்களின் புத்தகங்களையும் சிறியப் பதிப்பகங்களிலேயே வங்கினேன்.

சென்னையில் எனக்கு எப்பொழுதுமே சவாலாக இருப்பது கழிவறையைக் கண்டுப்பிடிப்பதுதான். இந்தமுறையும் சவாலாகவே இருந்தது. ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் வந்துப் போகும் சென்னையில் சரியான, சுகாதாரமான் பொதுக் கழிவறைகள் இல்லாதது மிகப்பெரியக் குறை.

கடைசி நாளுக்கு முந்தைய நாள் சென்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருன்ந்தது. புத்தக அரங்கைவிட உணவு அரங்குகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தீவுத்திடல் என்றதும் பொருட்காட்சி என்று நினைத்து வந்துவிடார்களோ என்று தோன்றியது. நிறைய இளைஞர்கள், குழந்தைகளை பார்த்தது சந்தோசமாக இருந்த்தது.

நான் வாங்கிய புத்தகங்களில் பட்டியல்

1. ஊரார் வரைந்த ஓவியம் - துரை. குணா

2. கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும்
     நமக்கான் மாற்று ஊடகங்களும் -   கீற்று நந்தன்

3. அருந்ததியர்களாகிய நாங்கள் - ம. மதிவண்ணன்

4. இந்து ஆன்மிகமே பாசிசம்தான் 

5. இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும் - மூவலூர் ஆ. இராமாமிர்தம்

6. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் - ஓவியம் புகழேந்தி

7. தமிழினி - ஒரு கூர்வாளின் நிழல்

8. ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானா புகோகா

9. பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் - யமுனா ராஜேந்திரன்

10. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகம் பிள்ளை

11. சார்லி சாப்ளின் - பி.பி கே. பொதுவால்

12. டாம் மாமாவின் குடிசை

13. அம்போத்கர் - சாதி ஒழிப்பு

14. அர்த்தமுள்ள இந்துமதம் 10 தொகுதிகளும்

பின் குறிப்பு சம்பவம் :

                                            இந்த பதிவிற்கும் இப்பொழுது நான் கூறப்போகும் சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதே நாளில் நடந்ததாலும், சுவாரஸ்யம் மிகுந்தது என்பதாலும் சொல்லுகிறேன்.


கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஆரணி செல்லும் பேருந்தில் அமர்ந்துக்கொண்டு இருக்கும் பொழுது, வேலூர் பேருந்திற்காக ஒரு இளம் பெண் நின்றுக்கொண்டிருந்தார். எப்படியும் ஒரு 20 வயது தான் இருக்கும். ஆரஞ்சு நிறச் சுடிதார் பச்சை நிற பார்டர். வெள்ளை லெக்கின்ஸ். வெள்ளை துப்பட்டா, பச்சை நிற வார் உடைய செருப்பு, ஆரஞ்சு கம்மல், கழுத்தில் மெல்லிசான சங்கிலி, எந்தவித ஒப்பனையும் இல்லாமல் மிக அழகாக இருந்தார்.

ஏதோ ஒரு ஈர்ப்பு அந்தப் பெண்ணிடத்தில் எனக்கு ஏற்பட்டது. நானும் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த்தேன். யாருக்காவோ காத்துக்கொண்டிருந்தார்.  நொடிக்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு இருந்த பெஞ்சில் உட்கார்ந்துக்கொண்டு கால் இரண்டையும் ஆட்டிக்கொண்டே ஏதோ ஒரு குளிர்பானத்தை குடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது, அந்தப் பெண்ணிடம் எனக்கு பிடித்தது அந்த பெண்ணின் குழந்தைதனம். முகம் மட்டும் அல்ல, அந்த பெண்ணின் மனதும் குழந்தையுள்ளம் கொண்டதாகத்தான் இருக்கும். குழந்தைகள் மட்டும்தான் எந்த ஒப்பனையும் இல்லாமலே அழகாகத் தெரிவார்கள். என் பேருந்துக் கிளம்பும்வரை அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

புதன், 27 ஏப்ரல், 2016

பிரேமம்

200 நாட்களைக் கடந்து ஒரு மலையாளச் சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது. அனேகமாக எல்லா நல்ல சினிமா ரசிகர்களும் பல முறைப் பார்த்து இருப்பார்கள். நான் இப்பொழுதுதான் பார்த்தேன் ”பிரேமம்” மலையாளச் சினிமாவை. இத்தனை நாளாக இதை பார்க்காமல் இருந்துவிட்டேனே என்று சற்று வருத்தமாக இருந்தது. படம் பார்த்தப்பிறகு எல்லாமே மறந்துபோய்விட்டது.

                                  சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என்று இந்தப் படத்தைப் பற்றி பேசி, ஏழுதிதள்ளிவிட்டார்கள். நான் இந்த படத்தில் ரசித்தவைகளை படம் பார்க்கும் போது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

                                இந்தப் படத்தில் முதலில் என்னைக் கவர்ந்த விடயம்.  ஒளிப்பதிவு. ஆனந்த். சி. சந்திரன் கேமிராவை வைத்து விளையாடி இருக்கிறார். புதுமையான சில கோணங்களை முயற்ச்சித்துப் பார்த்திருக்கிறார். குறும்படத்திலிருந்து வந்தவர்கள், லாங் சாட் காட்சிகள் அதிகம் வைக்க மாட்டார்கள் என்று, என் சினிமா நன்பர் ஒரு முறை கிண்டல் செய்தார். அதை உடைத்து மிக சிறப்பான லாங் சாட் காட்சிகளை சந்திரன் அமைத்திருக்கிறார்.

                           ஜார்ஜின் கல்லூரி கால அறிமுகத்தின் போது, மேடையின் அடியில் ஜார்ஜ் , கோயா, சம்பு மூவரும் வெடிகுண்டை பற்ற வைத்துவிட்டு, நடந்து வந்து முன்னால் நிற்கும் காட்சியை ஒரே ஷொட்டில் எடுத்திருப்பார்.

                        அல்போன்ஸ் புத்திரனின் நேரம் படத்தையும், ரொம்ப நாள் கழித்துதான் பார்த்தேன். வணிக சினிமாவில் இதுபோன்ற புதிய முயற்சிகள் அரிதே. அதற்காகவே அல்போன்ஸை பாராட்டலாம்.

                       அல்போன்ஸின் இயக்கத்தைக் காட்டிலும் அவரின், கதாபாத்திரங்களின் தேர்வுதான் அவரின் பலம். எல்லா கதாபாத்திரங்களும் சரியாகவே பொருந்தி இருந்தார்கள். அல்போன்ஸுக்கு நடிப்பும் சிறப்பாகவே வருகிறது.

                     நிவின்பாலியை பார்க்கும் போது, எதிர்காலத்தில் நடிப்பில் மிகப் பெரிய உச்சத்தை, தொடுவார் என்றே கூறலாம். பள்ளி மாணவனாக வருப்போதும் சரி, கல்லூரியில் வேட்டிக் கட்டிக் கொண்டு வருபோதும் சரி, கேக் கடை நடத்தும் பொருப்பான மனிதனாய் வரும்போதும் சரி, மிக இயல்பாகவே நடித்திருக்கிறார்.

                   அனுபமா, சுருட்டை முடி இருந்தாலும் பெண் அழகாக இருப்பார்கள் எண்பதற்கு அனுபமாவே சான்று. பாவம் நிறைய பெண்கள் இயற்கையாக தங்களுக்கு இருக்கும் சுருட்டை முடியை, ஏன் தான் நேராக்கிக்கொள்கிறார்களோ?

                 நடிப்பு குறைக்கூறும்படியாக இல்லை. அவருடைய பாங்கை சிறப்பாக செய்துள்ளார்.

                 கோயா, சம்புவாக வரும் கிருஸ்னன் மற்றும் சபரீஸ், அந்த பாத்திரமாகவே மாறியிருந்தார்கள்.

                  மலர் டீச்சரை ஒருதலையாக காதலிக்கும், பேராசிரியராக வரும் வினை போர்ட், அதி அற்புதமான நடிப்பு என்றே கூற வேண்டும். பி.டி மாஸ்டருடன் சேர்ந்து, செய்த நகைச்சுவையை இப்பொழுது நினைத்தாலும் மனம் சிரிக்கத் தொடங்கிவிடுகிறது.

             செலினாக வரும் மடோனா மட்டும் ஏனோ மனதில் ஒட்டவேயில்லை.


மலர் டீச்சர்

பண்டைய தமிழகத்தின் சேர நாடுதான், கேரளா. ஆனால் தமிழர்களை கேவலமாக பார்க்கும் போக்கு அங்கு உண்டு. ஆணால் இன்று மலரே, மலரே என்று மொத்த கேரளாவும், ஒரு தமிழச்சியின் மீது மோகம் கொண்டு அலைகிறது.

          ‘மலர்’
          ‘என் பேர சொன்னேன், உங்க பேரு’

என்ற முதல் வசனத்திலேயே நான் மலர் டீச்சரின் ரசிகனாகிவிட்டேன். இந்த காட்சியை மட்டும் ஒரு 30 முறை பார்த்து இருபோன். பின் அந்த இரவு முழுவதும் மலர் டீச்சர் மட்டுமே மனதை அடைத்துக் கொண்டுவிட்டார்கள்.

                மலர் டீச்சர் வரும் ஒவ்வொரு காட்சியையும், ரசித்து ஒரு நாள் முழுவதும் பேச சொன்னாலும் பேசிக்கொண்டேயிருப்பேன்.

மாணவர்கள் பெஞ்சுகளில் தாளம் தட்டுவதை, ஆசிரியர் அறையிலிருந்து தலையாட்டி ரசிக்கும் போதே நம் மனதில் நச்சென்று ஒட்டிக்கொள்கிறார். தன் மாணவன் மீது எற்படும் காதலை, வெளிகாட்டவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல், தவிக்கும் காட்சிகளில் மிக இயல்பாக நடித்து இருக்கிறார்.

              ஜார்ஜ் மற்றும் நன்பர்களுக்கு ஆண்டு விழாவிற்காக நடனம் கற்றுதரும் போது, இசையை கேட்டுக் கொண்டே, நடந்து வந்து சாய் பல்லவி ஆடு ஆட்டத்தை, பார்த்தபோது ஜார்ஜ்,கோய வை போல நானும் வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

            மலர் டீச்சருக்காகவே மீண்டும், மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஜார்ஜின் மூண்று காதல்களில், மனதில் பசுமையாய் நின்றது என்னவோ மலரின் காதல்தான். தெலுங்கில் அடுத்த மாதம் பிரேமம் வெளியாகிறது. ஸ்ருதியை என்னால் மலராக நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

          ஒரு வேளை தமிழில் எடுத்தால், சாய் பல்லவியே நடித்தால்தான், ஒரளவு மலரை மறுவுருவாக்கம் செய்யமுடியும். சாய் பல்லவியாலேயே மலரை மறுவுருவாக்கம் செய்வது சற்றே கடினம்.

 ராஜேஸ் முருகேசன்

படத்தின் இசையைப் பற்றி கூறியே ஆக வேண்டும். எல்லாப் பாடல்களுமே நன்றாக உள்ளது. மிகச் சிறந்த பின்னனி இசை. இளையராஜா, எ,ஆர். ஆரை படம் முழுவதும் கொண்டாடியிருக்கிறார்கள்.

    இன்னும் கூட தமிழில், கதா நாயகர்களையே நம்பி படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், பிரேமம் போன்ற சிறந்த பாத்திரங்களை கொண்ட திரைப்படங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

 மக்களுக்கு இந்த மாதிரி படம்தான் பிடிக்கிறது, என்ற பொய்யை தமிழ் சினிமா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நிறுத்தவேண்டும்.

ஆனால் தமிழில் புது இயக்குனர்கள், பல பரிச்சார்ந்த முயற்ச்சிகளை செய்வது, மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் உள்ளது.

சரி எனக்கு மறுபடியும் ‘பிரேமம்’ பார்க்கனும் போல் இருக்கு. நான் போய் படம் பாக்க போறேன்.

வியாழன், 10 மார்ச், 2016

தேனீ - மகரந்தக் குறிப்புகள்


இரண்டு நாட்களுக்கு முன்பு 
வாட்ஸ்-அப்பில் தேனீக்களைப் பற்றி சில குறிப்புகள் வந்தன.
அதை அப்படியே இங்கு பதிவிடுகிறேன். (தேனீக்களைப் பற்றிய ஒரு பதிவை சமீபத்தில் பிளாக்கில் வெளியிட்டுள்ளேன்.




தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
இனிக்கும் செய்தியல்ல....!

தேனீ...
.............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?
முதலில்... ஆச்சரியம்.

தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.

தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.

யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.

இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன.
ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...

அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.

ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,
நிச்சயம் இதுதான்.

ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.

தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்
தேனீ.

இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

 மத்த தேனீக்கள்
தானாகவே காட்டில் வளரும்.

ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை.

ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை.

மற்ற எல்லா
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது.

தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.

ஆண்
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும்.

கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு.

அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது?

குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது.

தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.

அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.

அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.

பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும்.

இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும்.

தேன்
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள்.

அதுதான் தேன்
சேகரிக்கும் தர்மம் !

இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும்.
அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.

புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும்.

அதன் பிறகு ராணித்
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.

உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.

கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.

இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.
வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம்.

வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள்
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.

தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.

இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.

தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''

''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.

தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.

ராணி மட்டும்
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும்.

இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

பணித்
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

அதில்
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள்.

செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.

இதனால்
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும்.

மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள்.
அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.

அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள்.

பல லட்சம் தேனீக்களை
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

செவ்வாய், 8 மார்ச், 2016

நீண்ட நெடிய துர்கனவு




எப்பொழுதும் நினைப்பதுண்டு
வாழ்க்கை 
ஒரு நீண்ட நெடிய
துர்கனவோ என்று

என்றாவது ஒரு நாள்
கனவிலிருந்து
எழுந்திடுவேன்
என்று நம்பியதுன்டு

கனவிலிருந்து
எழுந்திருக்க
என்னவெல்லாமோ
செய்தாகிவிட்டது

மரணம்தான் கனவிலிருந்து
எழுந்துக் கொள்ள
ஒரே வழியோ
என்று எண்ணி

மரணிக்க முயற்சித்த
போது
துர்கனவு கலைந்து
எழுந்திருந்தேன்

எப்பொழுதும் நினைப்பதுண்டு
வாழ்க்கை 
ஒரு நீண்ட நெடிய
துர்கனவோ என்று

சனி, 6 பிப்ரவரி, 2016

தலீத் இலக்கியமும் - அழகிய பெரியவனும்



தலீத் இலக்கியம் என்றால் என்ன?

            தலீத் இலக்கியம் என்றால், ஒரு குறிப்பிட்ட ஜாதி, இனத்தைப் பற்றி அந்த இனத்தாரால் எழுதப்படுவது கிடையாது.  விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பற்றி பேசுவதுதான், தலீத் இலக்கியம். அது எந்த இன, மொழி, ஜாதி மக்களாய் இருந்தலும்.

                 தலீத் இலக்கியம் என்றாலே, ஒவ்வாமையுடன் பார்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். தலீத் இலக்கியம் என்று கூறிக்கொண்டு, உங்களை நீங்களே, ஏன் பிரித்துக்கொள்கிறீர்கள். என்று விதாண்டாவாதம் பேசுகிறவர்களும் உண்டு. தலீத் இலக்கியம் பற்றி சரியான புரிதல் இல்லாதவர்களே, அது வேறு ஏதோ என்று ஒதுக்கிவிடுகின்றார்கள்.

               தலீத் இலக்கியம் என்றாலே, ஆதிக்க ஜாதியினரையும், பார்ப்பனர்களையும் சாடுவது. என்று என்னிக்கொண்டு, தவிர்ப்பவர்களும் உண்டு. ஆனால் உண்மையில், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முறை, சடங்குகள், வழிபாட்டு முறை, குடும்ப அமைப்புகள், துக்கம், சந்தோசம், காதல், காமம், திருமனம் என்று அவர்களைப் பற்றிய புரிதலை பெறவும் தலீத் இலக்கியத்தின் தேவை இருக்கிறது.

             ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட இனத்தில் பிறந்துவிட்ட, ஒரே காரணத்திற்காக ஒருவரை ஒதுக்குவதும், இழிவுபடுத்துவதும், புறக்கணிப்பதும், எப்படி சரியாக இருக்க முடியும். தான் எதற்காக புறக்கணிக்கப்படுகிறோம் என்று கூட தெரியாத அவல நிலை, தலீத் குழந்தைகள் மட்டும் சந்திக்க கூடிய மிக நுட்பமான பிரச்சனை. சமுகத்தில் அவர்கள் சந்திக்கும், பல சிக்கல்கலுக்குள் இருக்கும் உளவியல். இந்தியாவில் இன்னும் 80 சதவீதத்திற்கும் அதிகமான தலீத்கள், வறுமைகோட்டிற்கு கீழே, இருப்பதற்கு பின்னால் உள்ள அரசியல் இவற்றைப் பற்றி புரிதல் எற்பட தலீத் இலக்கியத்தின் அவசியம் உள்ளது.

அழகிய பெரியவன்
             தலீத் இலக்கியப் படைப்பாளிகளில், அழகிய பெரியவன் ஒரு குறிப்பிடத்தகுந்த படைப்பாளி. இவர் வேலூர் மாவட்டம், மேற்கு தொடர், பேர்ணாம்பட்டை சேர்ந்தவர். இயற்பெயர் அரவிந்தன். சுமார் 8 ஆண்டுகள் தொண்டு நிறுவனத்தில் பனிபுரிந்துவிட்டு. தற்போது பள்ளி ஆசிரியராக பனிப்புரிந்து வருகிறார்.

         1989 முதல் எழுதி வருகிறார்.  நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் இயங்குகிறார். தெளிந்த அரசியலோடு, தலித் மக்களின் பிரச்சினைகளை எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவராக விளங்குகிறார். அழகிய பெரியவன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார். ‘தகப்பன் கொடி’  நாவலுக்காக 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றவர்.

             தலித்துகளின் சமூகப் பிரச்சினை, வலிகள், போராட்டங்கள், உட்சாதி முரண்கள், தலித்பெண்களின் நிலை, மனித அக உணர்வுகள் முதலானவை அழகிய பெரியவனின் கதைக் களங்கள். வேலூர் மாவட்ட நிலபரப்பு, சேரிகள், மனிதர்கள், அங்கு அதிகமாக இருக்கும் விவசாயம், பீடி சுற்றுதல், தோல் பதனிடும் தொழில் என அழகிய பெரியவன் தன் சிறுகதைகளில் கையாண்டு இருக்கிறார். சேரிகளில் புழங்கும் இயல்பான பேச்சு மொழி, இவரின் கதைகள் முழுவதும் விரவிக்கிட்க்கின்றன.

      ”தீட்டு” என்ற அவரது சிறுகதை தொகுப்பை, கடந்த வாரம் படிந்தேன். தீட்டு, குறி என்ற இரண்டு குறு நாவலும், 14 சிறுகதைகளும் கொண்ட தொகுப்பு. அதில் தீட்டு, குறி இரண்டும் கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றவை.

அழகிய பெரியவன் சிறுகதைத் தொகுப்புகள்
  
தீட்டு, நெரிக்கட்டு, கிளியம்மாவின் இளஞ்சிவப்புக்காலை, அழகிய பெரியவன் கதைகள்

புதன், 13 ஜனவரி, 2016

தேனீகள் - வாழ்வும் அழிவும்



தேனை நம் உள்ளங்கைகளில் ஊற்றி, அவற்றை நக்கி சுவைத்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும். அந்த தேனுக்குப் பின்னால் நிறைய விடயங்கள் உள்ளன. விவசாயத்திற்கும், விவசாயிக்கும் மண்புழு மட்டுமே நன்பனில்லை தேனீயின் பங்கும் நிறைய உள்ளது.

                                    உலகத்தில் உள்ள அனைத்து தேனீக்களும் மிச்சமில்லாமல் அழிந்துவிட்டால், தேன் கிடைகாமல் போய்விடும் அவ்வளவுதானே என்று நினைந்துவிடாதீர்கள். தேனீக்கள் இல்லையென்றால் வெறும் 4 ஆண்டுகளில் இந்த உலகம் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும். உலகில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் 80% தேனீக்களால்தான் நடைப்பெறுகிறது.

                                  இத்தகைய தேனீக்களை கொன்று அழிக்கும் நோய் ‘காலனி கொலாப்ஸ் குறைபாடு’ (colony collapse disorder ). இந்த குறைபாட்டிற்கு முக்கிய காரணம் ’நியோனிகோடினாய்ட்ஸ்’ (neonicotinoid) என்ற பூச்சிக்கொல்லி. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை தாக்கி, செயலிழக்க செய்துவிடும்.


                    பெதுவாக தேன் கூட்டில், ஒரு ராணித் தேனீ இருக்கும். 1000 ஆண் தேனீக்கள் இனப்பெருக்கம் செய்வற்கென்றே இருக்கும். 50,00,000 முதல் 60,00,000 வரை வேலைக்காரத் தேனீ எனப்படும் பெண் தேனீக்கள் இருக்கும். 25 முதல் 35 நாட்கள் வரை உயிர்வாழும். இவைகள்தான் தன் உடலில் இருந்து வரும், மெழுகுப் பேன்றப் பொருளால், அறுகோண வடிவத்தில் அறைகளைக் கொண்ட கூடுகளை கட்டுகின்றன. அறுகோண வடிவத்தில் கட்டுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கணித சூத்திரப்படி, இந்த வடிவம் அதிக எடையை தாங்கும். மேலும் இந்த வடிவத்தில் உள்ள அறையை முழுவதுமாக பயன்படுத்தலாம்.


                   எல்லாத் தேனீக்களும் ஒரே சமயம் தேன் எடுக்க சென்றுவிடாது. சிறு குழு முதலில் சென்று தேன் இருக்கும் இடத்தை அறிந்துக் கொண்டு வந்து, மற்ற தேனீக்களுக்கு நடனம் மூலம், இடத்தைப் பற்றிய குறிப்புகளை தரும். புதிய இடத்திற்கு புலம்பெயரும் பேதும், இதே வழிமுறையைதான் பின்பற்றும். இப்படி செல்லும் தேனீக்கள்  நியோனிகோடினாய்ட்ஸ் தெளிக்கப்பட்ட பூக்களில் தேன் எடுக்கும் போது, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, தன் கூட்டிற்கு திரும்பிசெல்ல வழி மறந்து வழி தவறிவிடுகின்றன. பட்டினியால் அவைகள் இறந்துவிடும்.


                         நியோனிகோடினாய்ட்ஸ் மட்டும் அல்ல, கிளைஃபோசேட், எண்டோசல்பான் என்று, உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட இரசாயன உரங்கள் இன்னும் நம் வயல்களிலும், நம் உணவுத்தட்டிலும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 250 ரசாயன உரங்களில் 109 அபாயகரமானவை. மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட 66 உரங்கள் நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.

                      என்ன சாபம் வாங்கி வந்தோம் என்று தெரியவில்லை, உலகில் மற்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட அனைத்தும் இங்கு தாராளமாக, புழக்கத்தில் உள்ளது. இன்னும் கூட நாம் எதிர்வினையாற்றவில்லை என்றால், நம் எதிர்கால சந்ததினர் வாழ தகுதியில்லாத இடமாக நம் பூமி ஆகிவிடும்.

                       இதை மாற்ற ஒரே வழி மீண்டும் இயற்கைக்கு திரும்புவதுதான். அது சற்று கடினமான விடயம்தான் ஆனால் முடியாதது கிடையாது. 1960 ல் பசுமை புரட்சி வருவதற்கு முன்புவரை இயற்கை விவசாயத்தைதான் (ஆயிரம் ஆயிரம் வருடங்களாக) செய்துக்கொண்டு இருக்கிறோம். மீண்டும் இயற்கைக்கு மாறுவது என்பது முடியாத விடயம் அல்ல...