திங்கள், 24 அக்டோபர், 2016

பால்யக் கால் நினைவுகள் - 2

 நன்பர்கள்

                             


என் பால்யக் காலத்தில் எனக்கு முதலில் கிடைத்தது, தோழிதான். என் சித்தியின் மகள்(அம்மாவின் தங்கை). நாங்கள் அம்மு என்று அழைப்போம். எனக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருவர் அவர்கள் பிறப்பதற்கு 3 வருடங்க்ளுக்கு முன்பே பிறந்துவிட்டதால், என் முதல் சகோதரியும், முதல் தோழியாகவும், அம்முவே ஆகிவிட்டார்.

                              என் அப்பாவின்  வேலை நிமித்தம் நான் என் ஆயா (அம்மாவின் அம்மா) வீட்டில் வளர்ந்தேன். என் சித்தியின் வீடும் பக்கத்துத் தெருவிலே இருந்ததால் நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம். ஒரே பள்ளி, என்னைவிட சிறியவள் என்பதால் வகுப்பு மட்டும் வேறு.

  எங்கள் வீட்டில் ஆண், பெண் பாகுபாடு காட்டாமல், வளர்த்தார்கள். பெண் குழந்தைகளுக்குதான் எங்கள் வீட்டில் எப்பொழுதும் முன்னுரிமை. அதனால் தான் நான் பெண் மீது ஆதிக்கம் செலுத்தாமல், அவர்களை சக மனிதியாக பார்க்க கற்றுக்கொண்டேன்.

                       
 இன்று நிறைய ஆண்கள் பெண்ணை அடக்கி ஆள நினைக்கும், ஆணாதிக்க மனோபாவம் அவன் குடும்பத்தில்தான் விதைக்கப்படுகிறது. அதை இந்த சமுகம், ஊடகம், சினிமா வளர்த்தெடுக்கிறது.

                           மற்றபடி, பள்ளியில் 2 தோழிகள். நான்காம் வகுப்புவரை இதுதான் என் நட்பு வட்டம். பிறகு, என் அப்பாவிற்கு என் சொந்த ஊரான ஆரணிக்கே மாற்றல் ஆனதால், நானும், ஆரணி வந்துவிட்டேன்.


                        6 வகுப்பு படிக்கும் போதுதான், என் பள்ளிக்கால நன்பர்கள் அறிமுகமானார்கள். இளையராஜா, மோகன், ராஜ ராஜன் என் நெருங்கிய நன்பர்கள். 7 ஆம் வகுப்பில் வினோத் எங்களுடன் சேர்ந்தான். 8 ல் யுவராஜ்.

                   10 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். 11,12 ஆம் வகுப்புகளை நான் வேறுப் பள்ளியில் படித்தேன். அங்கு வேறு புதிய நன்பர்கள். ஆனந்த், பூபதி, செந்தில், புவனேஸ்வர், கோடீஸ்வரன், ராஜேஸ் என் பெரிய நன்பர்கள் வட்டமே இருந்தது. இன்று எவறுமே தொடர்பில் இல்லை. வினோத், யுவராஜ் மட்டும் இன்றுவரை தொடர்பில் இருக்கிறார்கள்.

பால்யக் கால நினைவுகள் - 1



 நான் படிக்கும் புத்தகம், நான் பார்க்கும் திரைப்படம், நன்பர்களுடனான உரையாடல் என, என் பாலியக் காலத்தை எப்பொழுதும் நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கும். நினைத்து மகிழவும், பேசிக் களிக்கவும் நிறைய நினைவுகளைக் கொண்டது என் பால்யக்காலம்.

இன்றையத் தலைமுறையில் பெரும்பான்மையானவர்களுக்கு, தன் முதிர்வயதிலோ, நடுத்தர வயதிலோ, எண்ணிப் பார்க்க அப்படி ஒன்றும் சுவாரசியமான நினைவுகள் இருக்காது என்றே நினைக்கிறேன். அவர்கள் உலகை கைப்பேசியும், தொலைக்காட்சியும் அடைத்துக் கொண்டிருக்கின்றது.

பத்து வருடங்களுக்கு முன்புவரைக் கூட, என் பால்யக்கால நிகழ்வுகள் நினைவில் இருந்தன். இப்பொழுது நிறைய மறந்துவிட்டது. சில மங்களாகத்தான் நினைவிருக்கிறது. வயது ஏற, ஏற பழைய நினைவுகள் மறந்துக் கொண்டே வருகின்றன.

ஊர் காசு



முதல் முதலில் என் சொந்த செலவிற்கு பணம் தரப்பட்டது, இன்றும் என் நினைவில் இருக்கின்றன. அதற்கு முன்பும் நிறைய முறை பணம் தரப்பட்டுள்ளது. “ஊர் காசு” என்றுக் கூறுவார்கள். விடுமுறையில் உறவினை வீடுகளுக்குச் செல்லும் போதும், அவைகள் நம் வீடுகளுக்கு வரும்பொழுதும், அந்த வீட்டு சிறார்களுக்கு பணம் தறுவார்கள், அதற்குதான் ஊர்காசு என்றுப் பெயர். அவைப் எப்பொழுதும் என் அப்பாவிடம்தான் போய் சேரும். அதனை செல்வு செய்யும் உரிமை எனக்கில்லை.

அப்பொழுது எனக்கு 7 வயது என்று நினைக்கிறேன். என் அம்மாவின் சித்தப்பா, எங்கள் ’சின்னத் தாத்தா’ 5 பைசா, 10 பைசாவாக சில சில்லரை நானயங்களை எனக்குத் தந்தார். அதுதான் எனக்காக, என் சொந்த செலவிற்காக கொடுக்கப்பட்ட முதல் பணம். அதை வைத்து என்ன வாங்கினேன் என்று நினைவில்லை. ஒரு வேளை தேன் மிட்டாய் ஆக இருக்கலாம். அப்பொழுது அதுதான் என் பிரியமான நொருவை.

என் சின்னத் தாத்தாவிடம் 1,2,3, பைசாக்களும் சில இருந்தன ஆனால் அரசாங்கம் அப்பொழுது அவைகள் செல்லாது என அறிவித்திருந்தன.