ஞாயிறு, 18 ஜனவரி, 2015

38 வது புத்தக கண்காட்சி


என் போன்ற புத்தக வெறியர்களுக்கு, இதுபோன்ற கண்காட்சிகள்தான் உன்மையான பொங்கல். எனக்கு இது ஐந்தவது முறை. சென்னையில் இருந்தவரை இரண்டு,முண்று முறை சென்று விடுவேன். இப்பொழுது என் சொந்த ஊருக்கே வந்து விட்டதாள் 1 முறை மட்டுமே செல்ல முடிந்தது. 

இம்முறை முன்னெப்போதும் இல்லாத அளவு மக்கள் கூட்டத்தால் கண்காட்சி நிரம்பி இருந்தது. குறிப்பாக இளம் தலைமுறையினர் அதிகம் இருந்தனர். நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புத்தகம் வாங்கி கொடுத்தது சந்தோசமாக இருந்தது.

இம்முறை நிறைய பெண் எழுத்தாளர்களின் புத்தகம் இருந்தது மிக மகிழ்சியாக இருந்தது. இப்பொழுதுதான் நாம் முன்னேற்ற பாதையில் பயனித்துக் கொண்டுஇருக்கிறோம் என்ற நம்பிக்கை எற்பட்டுள்ளது.

சுற்றுச்சுழல், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு, காடுகள் குறித்த புத்தகங்கள் அதிகம் இருந்தது.

சிறப்பாக பல சிறந்த உலக இலக்கியங்களை தமிழில் கண்டபோது சந்தோசமாக இருந்தது.

வருத்தம் அளித்தது இரண்டே விசயங்கள் தான்

1. சமச்சீர் கல்வி நோட்ஸ் விற்றது
2. கழிவறை வசதி இல்லதது.

எனக்கு தனிப்பட்ட முறையில் கவலை அளித்தது, புத்தகங்களின் விலை சற்று அதிகமாக இருந்தது. சென்ற ஆண்டை விட குறைவான புத்தகமே வங்கினேன்.

என் புத்தக பட்டியல்

1.நான் மலாலா

2. சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்
     எஸ்.ரா

3. வேண்டும் எனக்கு வளர்ச்சி

4. சூதாடி
    பியோதர் தஸ்தயேவ்ஸ்கி

5. லாரி டிரைவரின் கதை (TO HAVE AND TO LOSE)
     சிங்கிஸ் ஐத்மாத்தவ்

6. விலங்கு பண்ணை
     ஜார்ஜ் ஆர்வெல்

7. சசாகியின் காகித கொக்கு
      கோ. சுந்தர்ராஜன்

8. குறுந்தாவரம் (BONSAI)
      கலாநிதி. சி. ரவீந்திரநாத்
      ச. சுந்தரலிங்கம்

9. இது யாருடைய வகுப்பறை...?
      அயிஸா இரா. நடராஜன்

10. பசியாற்றும் பாரம்பரியம் [சிறுதாணிய உணவு செய்முறை]
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக