புதன், 13 ஜனவரி, 2016

தேனீகள் - வாழ்வும் அழிவும்



தேனை நம் உள்ளங்கைகளில் ஊற்றி, அவற்றை நக்கி சுவைத்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும். அந்த தேனுக்குப் பின்னால் நிறைய விடயங்கள் உள்ளன. விவசாயத்திற்கும், விவசாயிக்கும் மண்புழு மட்டுமே நன்பனில்லை தேனீயின் பங்கும் நிறைய உள்ளது.

                                    உலகத்தில் உள்ள அனைத்து தேனீக்களும் மிச்சமில்லாமல் அழிந்துவிட்டால், தேன் கிடைகாமல் போய்விடும் அவ்வளவுதானே என்று நினைந்துவிடாதீர்கள். தேனீக்கள் இல்லையென்றால் வெறும் 4 ஆண்டுகளில் இந்த உலகம் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும். உலகில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் 80% தேனீக்களால்தான் நடைப்பெறுகிறது.

                                  இத்தகைய தேனீக்களை கொன்று அழிக்கும் நோய் ‘காலனி கொலாப்ஸ் குறைபாடு’ (colony collapse disorder ). இந்த குறைபாட்டிற்கு முக்கிய காரணம் ’நியோனிகோடினாய்ட்ஸ்’ (neonicotinoid) என்ற பூச்சிக்கொல்லி. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை தாக்கி, செயலிழக்க செய்துவிடும்.


                    பெதுவாக தேன் கூட்டில், ஒரு ராணித் தேனீ இருக்கும். 1000 ஆண் தேனீக்கள் இனப்பெருக்கம் செய்வற்கென்றே இருக்கும். 50,00,000 முதல் 60,00,000 வரை வேலைக்காரத் தேனீ எனப்படும் பெண் தேனீக்கள் இருக்கும். 25 முதல் 35 நாட்கள் வரை உயிர்வாழும். இவைகள்தான் தன் உடலில் இருந்து வரும், மெழுகுப் பேன்றப் பொருளால், அறுகோண வடிவத்தில் அறைகளைக் கொண்ட கூடுகளை கட்டுகின்றன. அறுகோண வடிவத்தில் கட்டுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கணித சூத்திரப்படி, இந்த வடிவம் அதிக எடையை தாங்கும். மேலும் இந்த வடிவத்தில் உள்ள அறையை முழுவதுமாக பயன்படுத்தலாம்.


                   எல்லாத் தேனீக்களும் ஒரே சமயம் தேன் எடுக்க சென்றுவிடாது. சிறு குழு முதலில் சென்று தேன் இருக்கும் இடத்தை அறிந்துக் கொண்டு வந்து, மற்ற தேனீக்களுக்கு நடனம் மூலம், இடத்தைப் பற்றிய குறிப்புகளை தரும். புதிய இடத்திற்கு புலம்பெயரும் பேதும், இதே வழிமுறையைதான் பின்பற்றும். இப்படி செல்லும் தேனீக்கள்  நியோனிகோடினாய்ட்ஸ் தெளிக்கப்பட்ட பூக்களில் தேன் எடுக்கும் போது, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, தன் கூட்டிற்கு திரும்பிசெல்ல வழி மறந்து வழி தவறிவிடுகின்றன. பட்டினியால் அவைகள் இறந்துவிடும்.


                         நியோனிகோடினாய்ட்ஸ் மட்டும் அல்ல, கிளைஃபோசேட், எண்டோசல்பான் என்று, உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட இரசாயன உரங்கள் இன்னும் நம் வயல்களிலும், நம் உணவுத்தட்டிலும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 250 ரசாயன உரங்களில் 109 அபாயகரமானவை. மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட 66 உரங்கள் நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.

                      என்ன சாபம் வாங்கி வந்தோம் என்று தெரியவில்லை, உலகில் மற்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட அனைத்தும் இங்கு தாராளமாக, புழக்கத்தில் உள்ளது. இன்னும் கூட நாம் எதிர்வினையாற்றவில்லை என்றால், நம் எதிர்கால சந்ததினர் வாழ தகுதியில்லாத இடமாக நம் பூமி ஆகிவிடும்.

                       இதை மாற்ற ஒரே வழி மீண்டும் இயற்கைக்கு திரும்புவதுதான். அது சற்று கடினமான விடயம்தான் ஆனால் முடியாதது கிடையாது. 1960 ல் பசுமை புரட்சி வருவதற்கு முன்புவரை இயற்கை விவசாயத்தைதான் (ஆயிரம் ஆயிரம் வருடங்களாக) செய்துக்கொண்டு இருக்கிறோம். மீண்டும் இயற்கைக்கு மாறுவது என்பது முடியாத விடயம் அல்ல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக