ஞாயிறு, 1 மார்ச், 2015

எட்டு பண்பாடுகளின் நாடு


சில மாதங்களுக்கு முன்பு என் அலுவலக நன்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு சுழலியல் பக்கம் சென்றது.பொதுவாக எங்கள் பேச்சு உலக சினிமா, அரசியல், பொருளாதாரம், புத்தகங்கள் என்று இருக்கும். ( நிண்ட நாளைக்குப் பிறகு அறிவுப்பூர்வமாக உரையாட கிடைத்த ஒரு நன்பர்)

அன்றைய உரையாடலின் போது, "என்மகஜெ" என்ற நாவலைப் பற்றிக் கூறினார். அது ஒரு சுழலியல் குறித்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல் என்பது மட்டுமே அவருக்கு தெரிந்திருந்தது. இனையத்தில் என்னால் அப்புத்தகம் குறித்த விவரங்களை கண்டுப்பிடிக்க முடியவில்லை. சென்னை புத்தக கண்காட்சியிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஒரு நாள் எங்கள் ஊர் நூலகத்திற்கு சென்றிருந்தேன். இரவல் பெற்ற புத்தகங்களை மாற்றி வர, 6 மாதங்களாக தேடிய புத்தகம் என் முன்னால் வந்தது. நூலாகம் என்னை என்றுமே ஏமாற்றியது கிடையாது. எங்கள் ஊர் நூலகத்தில் நல்ல புத்தகங்கள் கிடையாது என்று என் நன்பர்கள் கூறுவார்கள். நூலகம் எப்பொழுதும் என்னை எமாற்றியது இல்லை.

என்மகஜெ - அம்பிகசுதன் மாங்காடு அவர்கள் எழுதிய மலையாள சுழலியல் நாவல். தமிழில் சிற்பி மொழிப்பெயர்த்துள்ளார். ஆரம்பத்தில் காடுகளை பற்றியும், பழங்குடியினரை பற்றிய கதை என்று நினைத்தேன். ஆரம்பத்தில் சற்று மெதுவாகதான் படித்தேன். 16 வது அத்தியாத்திற்குப் பிறகு, மொத்த நாவலையும் முடித்துவிட்டுதான் புத்தகத்தை கீழே வைத்தேன். இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இதுவரை எந்த புத்தகமும் என்னை இந்த அளவு பாதித்தது இல்லை. இந்த புத்தகம் மட்டும் பாதிப்பை ஏற்படுத்த காரணம் "என்டோ சல்பான்".

காலையில் முதல் வேலையாக இனையத்தில் என்டோ சல்பானை பற்றி தேடினேன். நான் படித்ததும், பார்த்த புகைப்படங்களும் என் இரத்தத்தை உறைய வைத்தது.

பூச்சிக்கொல்லி என்ற பெயரில் கொடிய நஞ்சை 25 ஆண்டுகளாக இந்த மண்ணில் டன் கணக்கில் கொட்டியிருக்கிறார்கள். இப்பொழுது நிறுத்தினாலும் இதன் வீரியம் குறைய 80 ஆண்டுகளாவது ஆகும். அதன் பிறகும் முடிந்துவிடும் விடயமல்ல இவை.

இந்த நஞ்சு தாவரம், பூச்சிகள், சிறு உயிரினங்கள், நுண்ணுயிரிகள், மனிதர்கள் என கொன்று குவித்துள்ளது. பல குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைவாகவும், அங்கயீனர்களாக பிறந்துள்ளனர். விசித்திர உருவங்களுடன் குழந்தைகள் பிறக்க இந்த என்டோ சல்பானே காரணம்.


புத்தகத்தில் ஒரு இடத்தில் "இவை நம்மீது போடப்பட்ட அணுகுண்டு, ஒரே நாளில் அல்ல கொஞ்சம் கொஞ்சமாக. ஜப்பானிலாவது வெளி நாட்டுக்காரன் குண்டு போட்டான். ஆனால் இங்கோ நம்மவர்களே என்டோ சல்பானை போடுகிறார்கள்."என்று வரும்.

எவ்வளவு உண்மை!

என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது, தடை செய்யப்பட்டப் பின்பும் தமிழ் நாட்டில் என்டோ சல்பான் புழகத்தில் இருப்பது. நம் விவசாயிகள் என்டோ சல்பானின் பாதிப்பு தெரியாமல் இன்னும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை என்டோ சல்பானை மட்டும் ஒழித்தால் போதாது. எல்லா இரசாயன உரங்களையும் கைவிட வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு மாறுவதுதான் ஒரே சிறந்த வழி.

சரி "என்மகஜெ" என்றால் என்ன? (தலைப்பை பார்க்கவும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக