ஞாயிறு, 22 மார்ச், 2015

சமோசா


 நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் பின்னால் ஆயிரம் கதைகள் ஒளிந்திருக்கும். சில சுவாரசியமாக இருக்கும், சில சோகமாக இருக்கும், சில மர்ம நாவல் போலக்கூட இருக்கும், ஏன் சில அசுவாரசியமாக கூட இருக்கும். ஆனால், நிச்சயம் கதை இருக்கும்.

என் அலுவலகம் இருக்கும் பகுதியில், மாலையில் சமோசா விற்கும் சிறுவர்களை பார்க்க முடியும்.அவர்களைப் பார்க்கும்போது, எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.
     
       யார் இந்த சிறுவர்கள்?
       இவர்கள் பள்ளிக்கு செல்வார்களா?
       எப்பொழுதும் சமோசாதான் விற்பார்களா?

என் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவே, அவர்களிடம் சமோசா வாங்க ஆரம்பித்தேன். எல்லோரும் காலையில் பள்ளிச் சென்றுவிட்டுதான் மாலையில் சமோசா விற்கிறார்கள் என்பது எனக்கு சற்று ஆறுதல் அளித்தது.
    எப்படியும் எல்லா சமோசாவையும் விற்றுவிட்டு, தன் முதலாளியிடம் கணக்கை ஒப்படைத்துவிட்டு வீடு செல்ல குறைந்தது இரவு 9 மணி ஆகிவிடும். 

ஆனால் இவர்கள் எப்பொழுது வீட்டுப்பாடங்களை செய்வார்கள்? ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை எப்பொழுது படிப்பார்கள்? எப்பொழுது விளையாடுவார்கள்?
காலை பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீதி வீதியாக அலைந்து சமோசா விற்றப் பின், களைப்பில் உறங்கத்தான் முடியும். எப்பொழுது படிப்பது? எப்பொழுது விளையடுவது?

இந்த வயதில் அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோசங்களைக் கூட அனுபவிக்க முடியாமல்,  இப்படி உழைக்க என்ன காரணம்? மிகச் சரியாக யூகித்தீர்கள்... வறுமை... இவர்களைப் பார்க்கும் போது, தியாகராய நகரில் ஜவுளிக்கடைகளில் வேலைச் செய்யும் பெண்கள்தான் நினைவுக்கு வந்தார்கள்.

ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தப் போது, அவர்களில் ஒரு சிறுவன் கலக்கத்துடன் நின்றுக்கொண்டு இருந்தான்.
அவனிடம் 10ரூபாய்க்கு சமோசா வங்கிக் கொண்டு விசாரித்தேன். யாரோ ஒரு சிறுவன் 2 சமோசாக்களை திருடிக்கொண்டு ஓடிவிட்டதாக கூறினான். "5 ரூபாய் போச்சுண்ணா" என்று அவன் கூறியப் போது, எனக்கு மனம் கலங்கிவிட்டது. அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
வந்தப் பிறகு, யேசித்தேன் ஆறுதல் கூறியதற்க்கு பதிலாக, ஒரு 5 ரூபாய் கொடுத்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பானே என்று தோன்றியது.

மறு நாள் அந்த சிறுவனைப் பார்த்தேன் நேற்று நடந்ததை மறந்துவிட்டு, சமோசா விற்றுக்கொண்டு இருந்தான். இன்னும் விழிப்பாக. நல்லவேளை அவனுக்கு 5 ரூபாய் கொடுக்கவில்லை. அப்படி செய்து இருந்தால், இதுப்போல் எப்பொழுது நடந்தலும், யாராவது இப்படி உதவுவார்கள் என்று எதிபார்த்து இருப்பான். ஆனால் இப்பொழுது, இனி இதுபோல் நடக்காமல் எப்படி இருப்பது என்று கற்றுக்கொண்டான்.

இவை இங்கு மட்டும் நடப்பவை அல்ல........ 

 இந்தியா முழுவதும் இவர்களைப் போல் பலர் இருக்கிறார்கள். இதற்க்கெல்லாம் தீர்வுதான் என்ன?

 அரசாங்கத்தை மட்டும் குரைச் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. நம் நாட்டின் எதிர்காலமாகிய இவர்களின் வாழ்க்கையை சீரமைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக